Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ... நாகூர் நாகநாதர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகூர் நாகநாதர் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழாவில் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனித்திருவிழாவில் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
04:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் மிகவிமர்ச்சியாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இன்று காரைக்கால் அமையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.பின் புனிதவதியார் சிகப்பு பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தளினார்.பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும். மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர் பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது. காலை 11மணிக்கு ஆலய குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம்,மஞ்சல், குங்குமம். மாங்கனியுடன் கூடிய தாம்பூலபை வழக்கப்பட்டது.பின் மாலை ஸ்ரீபிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா,எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன்,நாஜிம், நாகதியாகராஜன்.சீனியர் எஸ்.பி.. லோகேஸ்வரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன். அறங்காவலர் குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம். துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு இடங்களில் போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

மாங்கனி இறைத்தல்: காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா முக்கிய நிகழ்ச்சியான நாளை (13ம் தேதி) அதிகாலை 3மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது.காலை பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும்,காலை 7மணிக்கு நான்கு திசையிலும் வேதபாராயணம் எதிரொளிக்க பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தமர்ந்து வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் பவழக்கால் விமானத்தில் சிவபெருமாள் காவியுடை, ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து.பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு அடியார் கோலத்தில் திருமாளிகையில் எழுந்தருளும் சிவபெருமானை புனிதவதியார் அழைத்து வந்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு. 8.30 மணிக்கு பரமதத்தர் மனைவி புனிதவதியிடம் மற்றொருக் கனியைக் கேட்க மாங்கனியை வரவழைத்துக் கொடுத்த அவரது அற்புதக்காட்சியை கண்டு அதிர்ந்த பரமதத்தர் கப்பல் ஏறிப்பாண்டிய நாடாகிய ஸ்ரீசித்தி விநாயகர் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar