பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
05:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சாமிக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
சாணார்பட்டி ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள கோ. அய்யாபட்டி, பெருமாள் கோவில்பட்டி, சின்ன கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, கடுக்காப்பட்டி, சரளப்பட்டி உள்ளிட்ட ஊர் பொதுமக்களால் கோம்பைபட்டியில் முத்தாலம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் சாமி கண் திறப்பு நடந்தது. நாளை ஜூலை 13 கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருச்செந்தூர், ராமேஸ்வரம், அழகர் கோவில், குருவாயூர், வெள்ளிமலை, கரந்தமலை, கொடுமுடி, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு தீர்த்த குடங்கள் அழைப்பு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கார்த்திகைச்சாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றார்.