பதிவு செய்த நாள்
12
ஜூலை
2022
05:07
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே தவசிமடை வாடிப்பட்டி மலையாள பகவதி அம்மன், காளியம்மன், மாரியம்மன், எட்டடியான், செல்வ விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி ஜூலை 9 அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்பலங்காரம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதற்கால யாக வேள்வி பூஜை ஆரம்பமானது. ஜூலை 10 சோம கும்ப பூஜை, மண்டப பூஜை, வேத பாராயணம், வேதிகா அர்ச்சனை, அக்னி கார்யம் உள்ளிட்ட நான்கு கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, தனபூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக ராமேஸ்வரம், திருச்செந்தூர், அழகர் கோவில், திருமலைக் கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக் குடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின் மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வந்து உச்சியில் உள்ள கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தம் கும்பங்களில் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்தனர்.