வடமதுரை கோயிலில் நிழற்கூரை பணி துவக்கம் : 7ஆண்டு இழுபறிக்கு முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2022 06:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் நிழற்கூரை அமைக்கும் பணியில் ஏற்பட்டிருந்த இழுபறி 7ஆண்டிற்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.
கோயில் வளாகத்திற்குள் வெயில், மழை நேரங்களில் ஒதுங்கி நிற்க இடமின்றி பக்தர்கள் பரிதவிக்கின்றனர். இதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும் வகையில் கோயில் வளாகத்திற்குள் பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதிகளின் முகப்பு பகுதியில் 5000 சதுர அடிக்கு நிரந்தரமாக இரும்பு கட்டமைப்பிலான கூடாரம் அமைக்க உள்ளூர் பிரமுகர்கள் முடிவு செய்தனர். 2015ல் ரூ.10 லட்சத்தில் கேல்வால்ம் சீட் எனப்படும் குளிர் தன்மை தரும் நிழற்கூரை அமைக்க இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு, தளவாடப் பொருட்கள் கோயிலுக்குள் இறக்கி வைக்கப்பட்டன. ஆனால் கோயில் ஸ்தபதியின் ஒப்புதல் கிடைக்காமல் 7 ஆண்டுகளாக பணி கிடப்பில் இருந்தது. தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி துவங்கி நடந்து வரும் நிலையில், சவுந்தரவல்லி தாயார் சன்னதி முன்பாக மட்டும் நிழற்கூரை அமைக்க ஸ்தபதி ஒப்புதல் தரப்பட்டது. இதனால் ஏழு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிழற்கூரை பணி தற்போது துவங்கியுள்ளது.