தஞ்சாவூர் பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 07:07
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவிலில் நேற்று இரவு பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இது போல் இவ்வாண்டும், நேற்று இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாலை ஆறு மணிக்கு பழங்கள், மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல், பூக்கள் உள்ள சீர்வரிசையை பெண்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரகங்கள் முழங்க மாப்பிளை அழைப்பு உட்பட சம்பிரதாய சடங்குகள், ஹோமம் நடந்து முடிந்து பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதங்களும், பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் செய்திருந்தனர்.