நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 08:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழாவில் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி தேர், அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் அணிவகுத்தன. தேர் நிலையம் வந்தவுடன் சப்தா வர்ண பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பிள்ளையன் கட்டளை சார்பில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. அம்பாள் சன்னதி தெப்பக்குளத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு பலவிதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. அஸ்திரதேவர் , அஸ்திர தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தெப்பத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. இதில் திரளான ர்கள் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து காப்பு அறுக்கப்பட்டு , சுவாமி, அம்பாளுக்கு பஞ்சமுக தீபாராதனை நடந்தது.