பதிவு செய்த நாள்
13
ஜூலை
2022
11:07
பல்லடம்: கோவில்களில், ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாட்களிலும் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். மேலும், கோவில்களில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக, இம்மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பதால், ஏராளமான பக்தர்கள்அம்மன் கோவில்களுக்கு வருகை தந்து வழிபாடு மேற்கொள்வர். கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் கோவில் விழாக்கள், நிகழ்ச்சிகள், பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை. பக்தர்கள் இன்றி கோவில்களில் அன்றாட வழிபாடுகள், பூஜைகள் நடந்தன. கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதால், நடப்பு ஆண்டு கோவில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. ஓரிரு தினங்களில், ஆடி மாதம் துவங்க உள்ளதால், பக்தர்கள், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடுகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.