பதிவு செய்த நாள்
13
ஜூலை
2022
11:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று காலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. அதில் புண்ணியாக வாஜனம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வேதிகா அர்ச்சனை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாதாரணை உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. முன்னதாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், குருவாயூர்,கொடுமுடி, அழகர் கோவில், திருமலை கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தம் நிறைந்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. நேற்று அய்யாபட்டி பிரசித்தி பெற்ற அய்யனார் கோவிலில் தீர்த்தக் குடங்களை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் மேளதாளம் முழங்க பக்தர்கள் ஆரவாரத்துடன் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக முத்தாலம்மன் கோவில் கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.