கீழக்கரை: கீழக்கரை அருகே சிவகாமிபுரத்தில் உள்ள கூனியம்மன் கோயிலில் 36 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 3 அன்று காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது. நாள்தோறும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. மூலவர் கூனியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேர்த்திக்கடன் பக்தர்கள் நெய்விளக்கு, மாவிளக்கு உள்ளிட்டவைகளை எடுத்தனர். மாலை 4 மணி அளவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று கீழக்கரை 21 குச்சி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சிவகாமிபுரம் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.