மேலூர்: மேலுார் உச்சிமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று அழகர் கோயில் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கு அம்மனுக்கு பாலாபிசேஷகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை, பூத்தட்டு ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இன்று (ஜூலை 13) உச்சி பொங்கல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது (ஜூலை 14) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.