சரவணம்பட்டி: சிரவை கவுமார மடாலயத்தில் பத்து லட்ச சுப்ரமணிய ஆயிரத்தெட்டு நாம அர்ச்சனை பெருவிழா இன்று மாலை நடக்கிறது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில் உலக நலன் வேண்டி சகஸ்ர சுப்ரமணிய சப்தசதி மகாவேள்வி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று 3 கால வேள்விகள் நடக்கின்றன. திருமுறை, திருப்புகழ் விண்ணப்பம், மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பத்து லட்ச சுப்ரமணிய ஆயிரத்தெட்டு நாம அர்ச்சனை பெருவிழா நடக்கிறது. நாளை நிறைவு பெறுகிறது: 10 கால வேள்விகள் நாளை முற்று பெறுகின்றன. தண்டபாணி கடவுளுக்கு 2 ஆயிரம் கிலோ மலரபிஷேகம் பகல் 12. 30 மணிக்கு நடக்கின்றன. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு திருமுறை, திருப்புகழ் விண்ணப்பங்கள் நடக்கின்றன.