ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்: ஜூலை 24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 05:07
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடக்கிறது. ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்ட திருவிழா பொதுவெளியில் நடக்கவில்லை. கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடந்தது. தற்போது வழக்கமான சூழல் துவங்கி உள்ளதால், இந்தாண்டு தேரோட்ட திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி ஜூலை. 24 அன்று காலை 09:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. ஜூலை 28 அன்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை, ஜூலை 30 இரவு 07:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலம் நடக்கிறது. ஆகஸ்ட் 1-இல் காலை 09:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.