இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2022 05:07
சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வரும் 24ம் தேதி காலை 10.00 மணிக்கு காஞ்சி வரதராஜ கோயிலிலும், 28ம் தேதி காலை 9.00 மணியளவில், திருவையாறு அப்பர் கயிலை காட்சி திருக்குளத்தில் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது. கோயிலில் பன்னிருதிருமுறை பாராயாணம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: எஸ். கணேசன் 9840 123 866 நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்