பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
08:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆனி மாத பவுர்ணமியையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுவதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர் மலையை, 14 கி.மீ., துாரம் நடந்து கிரிவலம் செல்வர். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். ஆனி மாத பவுர்ணமி திதி, நேற்று அதிகாலை, 3:18 மணிக்கு தொடங்கி, இன்று, 14ல் அதிகாலை, 12:52 மணி வரை உள்ளது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சென்னை, வேலுார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.