600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2022 08:07
கடலூர் : திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் வளாகத்தில், குழி தோண்டியபோது ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை பீடத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தில் 600ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஆராமுது அம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. கோவிலின் திருப்பணியையொட்டி மண்டபம் கட்டுவதற்காக நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலை, கிராம முக்கியஸ்தர்கள் மணி, அரியபுத்திரன், அன்பழகன், மனோகர், பாலகுரு முன்னிலையில் ஜே.சி.பி.,எந்திரம் மூலம் நான்கு இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது தென்மேற்கு திசையில் பள்ளம் தோண்டும் போது ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் உலோகத்தாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் நேற்று மாலை அப்பகுதி மக்களுக்கு பரவியதால், அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.