பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
10:07
சிவகிரி: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழாநடந்தது. வாசு தேவநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் (எ) சிந்தாமணிநாதர் கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
10ம் திருநாளான கடந்த 12ம்தேதி காலை 9 மணி அளவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா நடந்தது. மாலை 6 மணிக்கு சப்தாவரணம் மண்டகபடி தாரரான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரிஷபவாகன சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் வீதியுலா நடந்தது. இரவு தெப்பத்தில் நாடார் உறவின் முறைசார்பில் தெப்பத்திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எஸ்.டி.கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கப்பழம், தாளாளர் முருகேசன், டவுன்பஞ்., தலைவர் லாவண்யா, கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், மகாத்மாகாந்தி சேவாசங்கதலைவர் தவமணி. அனைத்து சமுதாய, அரசியல் கட்சி நிர்வாகிகள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின் முறைநிர்வாகிகள் செய்திருந்தனர்.