திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் ஆடிவெள்ளித் திருவிழா நிறைவடைந்தது. இக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து பால்குடம்,பூத்தட்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடைசி வெள்ளியான நேற்று பக்தர்கள் காலை 9 மணிக்கு பால்குடத்துடன் மடத்திலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு சென்றனர். பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் ராஜகாளியம்மனைதரிசித்தனர். அன்னதானம் நடந்தது.சிங்கம்புணரி தேத்தாங்காட்டில் சர்வசித்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கடந்த 13 ஆண்டுகளாக இங்குள்ள இந்து,முஸ்லிம் மக்கள் இணைந்து கடைசிவெள்ளியன்று நடக்கும் அன்னதானத்திற்கு அனைவரும் நிதி வழங்குவதுடன் விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.நேற்று விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானக்குழு தலைவர் ஞானம், செயலாளர் பாலு, பொருளாளர் செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர் ரபீக்,அன்னதான குழு உறுப்பினர் பாரூக் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.