Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் ராஜகாளியம்மன் ... புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் உலகநன்மை வேண்டி திருவிளக்கு பூஜை! புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
10:08

பசியை யாரொருவன் பொறுத்துக் கொள்கிறானோ அவனுக்கு இறையருள் உண்டு. ஒருவனுக்கு பசி ஏற்பட்டாலோ, தேவை ஏற்பட்டாலோ அதைப் பகிரங்கப்படுத்தாமல் மக்களிடம் மறைத்து விடுவானாகில் ஒரு வருடம் ஹலாலான உணவை அவனுக்கு கொடுப்பதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ""பசித்தவர்களுக்கு இறைவன் நிச்சயம் உணவளிப்பான். பசிக்கிறதே என அடுத்தவர்களிடம் உணவு கேட்காதீர்கள் என்றும்,""ஒருவன் யாசகத்தின் ஒரு கதவைத் திறந்தால், அல்லாஹ் அவன் மீது ஏழ்மையின் எழுபது கதவுகளைத் திறந்து விடுகிறான், என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கை நீட்ட நீட்ட வறுமை தான் பெருகும். நல்லது எது, கெட்டது எது என்பது பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

ஒருமுறை நாயகம்(ஸல்) அவர்களின் நண்பர் ஒருவர், திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற நண்பர்கள் நபிகளாரிடம், ""அண்ணலாரே! இவர் இவ்வளவு உடல்பலம் மிக்கவராக இருக்கிறார்.இந்த பலத்தை மட்டும் இவர் நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும், என்றனர். அதற்கு அண்ணலார், ""தோழர்களே! அவர் தம் பச்சிளங்குழந்தையின் தேவைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி. பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்லவழி.

வயது முதிர்ந்த பெற்றோர்களின் பணிவிடைக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது சீரியவழி. நெறி கெட்ட வழியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சென்று கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் நல்லவழி. ஆனால், பெருமைக்காகவும், புகழுக்காகவும் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும், என்றார்கள்.இந்த நல்வழிகள் குறித்து இந்த நோன்புகாலத்தில் சிந்திப்போம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar