Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ... வேளாங்கண்ணி திருவிழாவிற்கு 67 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை: சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
11:08

சேலம்: ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று, ஆடிக்கிருத்திகையும் ஒருசேர வந்ததால், அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடிக் கிருத்திகையையொட்டி, நேற்று, முருகப் பெருமானுக்கு, விரதமிருந்து, பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று, சாத்துப்படி செய்து வழிப்பட்டனர். அதேபோல, ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சேலம், குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில், நேற்று, 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின்னர், ராஜ அலங்காரத்தில், தண்டாயுதபாணி ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அம்மாப்பேட்டை குமரகுரு சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து, பகல் 12 மணிக்கு ஓம்கார தீபம் ஏற்றி கூட்டு வழிபாடு நடத்தப்பட்ட. இதில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஜாகீர் அம்மாபாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், மூலவர் பழனியாண்டவர் தங்கக்கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையின் நின்று, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். அதேபோல, கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன் கோவில், ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோவில்களிலும் சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் சிலர், காவடி எடுத்து வந்து சாத்துபடி செய்தும், முடிகாணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். ஆடி வெள்ளி: ஆடிமாத கடைசி வெள்ளியான நேற்று, சேலத்தில், எட்டுப்பட்டியையும் கட்டிக்காக்கும், தலைமை காவல் தெய்வமான, கோட்டை மாரியம்மன் கோவில், எல்லை பிடாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன், செங்குந்தர் மாரியம்மன், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன், பெரிய மாரியம்மன், குகை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புற்றுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், பக்தர்கள் குடும்பம் சகிதமாக சென்று, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar