ஆடி முதல் நாள் அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2022 01:07
கம்பம்: ஆடி முதல் நாள் என்பதால் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் தம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டி அம்மன், உத்தமபாளையம் ஞானம்மன், சின்னமனூர் சிவகாமி அம்மன், உத்தமபாளையம் துர்க்கையம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.