கோமுக்தீஸ்வரர் கோவிலில் கொரோனா நீங்க 10 ஆயிரம் தேங்காய் உடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2022 05:07
மயிலாடுதுறை: திருவாவடுதுறை கோவிலில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 10 ஆயிரம் தேங்காய் உடைக்கப்பட்டது.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் கொரோனா தொற்று நீங்க வேண்டி பக்தர்கள் 10 ஆயிரம் தேங்காய் உடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான கோமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் திருஞானசம்பந்தர் தனது தந்தையின் சிவ வேள்விக்காக பதிகம் பாடி ஆயிரம் பொன் பெற்றார். மேலும் சுவாமி முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு குழந்தை பேறு அளித்த தலமாகவும், திருமூலர் மூவாயிரம் திரு மந்திரங்களை அருளிய தலம் ஆகும் இத்தலம் விளங்கிவருகிறது. இக்கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் என்பதுடன், சங்கடங்கள் யாவும் நீங்க பெறும் என்பதும் ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் நேற்று உலகில் கொரோனா நோய்த்தொற்று முற்றிலுமாக நீங்க வேண்டி பக்தர்கள் 10 ஆயிரம் தேங்காய்களை மினி வேனில் ஏற்றி கொண்டு வந்து கோவில் ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதி வரை சிதறுதேங்காய் விட்டு சுவாமிக்கு வேண்டுதல் வைத்தனர் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.