பதிவு செய்த நாள்
17
ஜூலை
2022
05:07
பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 35 யானைகளுக்கு உணவளிக்கும் "யானையூட்டு" திருவிழா விமர்சையாக நடந்த்து.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆடி மாதம், யானைகளுக்கு "யானையூட்டு" (உணவு வழங்குதல்) திருவிழா, சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டுக்கான விழா நடந்தது. தந்திரி புலியன்னூர் சங்கரன் நம்பூதிரி தலைமையில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 12 ஆயிரத்து எட்டு தேங்காய்கள், 2500 கிலோ வெல்லம், 1500 கிலோ அவில், 750 கிலோ மலர்கள், 250 கிலோ எள்ளு, எலும்பிச்சை, கரும்பு, 500 கிலோ நெய், 100 கிலோ தேன் பயன்படுத்தப்பட்டன. கோவில் தெற்கு கோபுர நடையில் 63 யானைகளுக்கு, 9.45 மணியளவில் 10 வகை பழங்களுடன் 500 கிலோ புழுங்கல் அரிசியில் மூலிகைகள், வெல்லம், மஞ்சள் தூள், நெய், கரும்பு ஆகியவை கலந்த "யானையூட்டு" நிகழ்ச்சி நடந்தன. தேவஸ்தானத்தின் முதிய யானையான சந்திரசேகரன் என்ற யானைக்கு உணவு வழங்கி கோயில் மேல்சாந்தி பய்யம்பிள்ளி மாதவன் நம்பூதிரி துவக்கி வைத்தார். இம்முறை குருவாயூர் கோயிலின் 7 யானைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.