பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
08:07
நாமக்கல்: ஆடி மாத பிறப்பு மற்றும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆடி மாத பிறப்பான நேற்று, நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு சுவாமிக்கு வடைமாலை சாற்றப்பட்டது.பின், நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், மஞ்சள், குங்குமம், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்புஅபிஷேகம் நடந்தது.இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.