மலைப்பகுதியில் ஆடிப்பிறப்பு கோயில்களில் சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 08:07
தாண்டிக்குடி , கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலை பகுதியில் ஆடி மாத பிறப்பை அடுத்து கோயில்களில் சிறப்பு தரிசனம் நடந்தது. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், தாண்டிக்குடி பாலமுருகன், கொடைக்கானல் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல் காடு பூதநாச்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் ஆடி மாத பிறப்பை அடுத்து கோயில்களில் அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தன. தொடர்ந்து அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடைக்கானலில் ஆடி மாத பிறப்பில் புதுமணத் தம்பதிகள் சுற்றுலாத்தலங்களில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.