கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பிறப்பு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 08:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே உள்ள வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆடி பிறப்பை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. கதிர் நரசிங்க பெருமாள் மற்றும் மூலவர் ராமானுஜர் சாமிக்கும் பால், பன்னீர், சந்தனம், சவ்வாது உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் மல்லிகை, முல்லை, செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.