பதிவு செய்த நாள்
18
ஜூலை
2022
08:07
திருவேற்காடு: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிளக்கு பூஜை, விமரிசையாக நடந்தது.
சென்னை திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில், சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க, 1,008 சக்தி மந்திரங்களுடன், பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.அப்போது, மஞ்சள், குங்குமம், சந்தன பொட்டு வைத்து, குங்குமம் மற்றும் பூக்களால், மாங்கல்ய கயிறு வைத்து, விளக்கேற்றி சிறப்பு பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும், ஆடி மாத பிறப்பையொட்டி, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மாதம் தோறும் பவுர்ணமி நாளில் நடைபெறும், திருவிளக்கு பூஜையில், திருவேற்காடு சுற்றுவட்டாரங்களில் உள்ள பெண்கள் பலரும் பங்கேற்று அம்பாளின் அருள் பெற்று செல்கின்றனர்.