காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2022 10:07
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான மலைமீது உள்ள ஸ்ரீ வள்ளி-தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடாந்திர ஆடி கிருத்திகை பிரம்மோற்சவ விழா வரும் 18.7.2022 முதல் 28.7.2022 வரை வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆடி கிருத்திகை பிரம்மோற்ச விழாவிற்கான சுவரொட்டிகளை இன்று ஸ்ரீ காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் சுவரொட்டிகளை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர். பின்னர் அனைவருக்கும் வழங்கினர். ஆடி கிருத்திகை பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வுகளாக வரும் 22/7/202 வெள்ளிக்கிழமை அன்று பரணி உற்றுவமும் 23 அன்று ஆடி கிருத்திகை விழாவும் 24 ஆம் தேதி கோயில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவமும் 25ஆம் தேதி வள்ளி - தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என்று கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார். இந்நிலையில் இன்று விக்ஞான மலை மீது ஆணிக்கிருத்திகை பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.சீனிவாசலு மற்றும் சிவன் கோயில் அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு மேற்பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.