பழநி: மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குட அபிஷேகம் செய்தனர்.மஞ்சநாயக்கன்பட்டியில், உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாத கடைசி வெள்ளியன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தாண்டிற்கான விழாவில், முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் அர்ச்சனை, தீபாரதனை பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.