Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி ... நல்லாத்துார் பெருமாள் கோவிலில் 28ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடுமுடி காவிரி கரையில் பரிகாரம் செய்ய தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
05:07

கொடுமுடியில் தாசில்தார் மாசிலாமணி தலைமையில், தாலுகா அலுவலகத்தில், நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது. இதில் கோவில் பகுதியில் பரிகார நிலையம் வைத்திருப்போர், ஆற்றோரம்  கடை வைத்திருப்போர் என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர்  (பொறுப்பு) சுகுமார், பொதுப்பணி மற்றும் மின்வாரிய துறை, போலீசார் கலந்து கொண்டனர்.

காவிரி ஆற்றங்கரையில், இனிவரும் காலங்களில் யாரும் பரிகாரம் செய்யக் கூடாது. அதற்கென கோவில் நிர்வாகத்தால் தனி இடம் ஒதுக்கப்படும். பரிகாரம் செய்யக்கூடிய, முறைப்படி பயிற்சி பெற்ற,  சான்றிதழ் வைத்துள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் பரிகாரம் செய்யக்கூடாது. முறையான பயிற்சி பெற்றவர்கள், தகுந்த விண்ணப்பத்துடன்,  செயல் அலுவலரை அணுகி அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். ஆற்றங்கரையில் பரிகார நிலையம் வைத்திருக்கும் இடம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. எனவே ஆக்கிரமிப்பாளர்கள்  உடனே அகற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். ஆக்கிரமிப்பை அகற்ற வரும், 31ம் தேதி வரை, அவகாசம் வழங்கப்படுகிறது. ஆக.,1க்குள் ஆற்றங்கரையில் உள்ள  கடைகளையும், சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே எடுத்துக் கொள்ளவும் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, ... மேலும்
 
temple news
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar