நல்லாத்துார் பெருமாள் கோவிலில் 28ம் தேதி புஷ்பாங்கி சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2022 05:07
நெட்டப்பாக்கம் : நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு புஷ்பாங்கி சேவை உற்சவம் நடக்கிறது.ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், வரும் 28ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, இரவு 7:00 மணிக்கு புஷ்பாங்கி சேவை உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி காலை 10.00 மணிக்கு மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சன்னதி புறப்பாடு நடக்கிறது.வரும் ஆக. 1ம் தேதி, ஆடிப்பூர உற்சவம் நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு பெருந்தேவி தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் திருக்கோலத்தில் பெருந்தேவி தாயார் சன்னதி புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு, பெருந்தேவி தாயாருக்கு பூவங்கி சேவை உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர். திருமணமாகாதவர்கள், இக்கோவிலில் தொடர்ந்து 8 வெள்ளிக் கிழமைகளில் பெருந்தேவி தாயாருக்கு அர்ச்சனை செய்தால், விரைவில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.