பெருநகர் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2022 05:07
காஞ்சிபுரம்-ஆடிகிருத்திகை விழாவையொட்டி, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை பெருநகரில், பழமையான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிகிருத்திகையொட்டி இக்கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு, நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு மலர் அங்காரத்தில், வள்ளி, தெய்வானையருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்தார்.