பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
05:07
திருத்தணி-ஆடி மாதம் இரண்டாவது ஞாயிறு ஒட்டி, அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.திருத்தணி நகரத்தில், துர்க்கையம்மன், தணிகாசலம்மன், படவேட்டம்மன், வன துர்க்கையம்மன், தணிகை மீனாட்சி, அங்காள பரமேஸ்வரி, துர்க்கை கருமாரியம்மன், பெரியபாளையத்து அம்மன், பவானியம்மன் உட்பட, 15க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் ஞாயிறு ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.காலையில் பெண்கள் கூழ்வார்த்தல், பின் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடும் நிகழ்ச்சியும் நடந்தது.இதில் திரளான பெண்கள் பங்கேற்று, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், அம்மன் கோவில்களில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.