பெரியகுளம், : பெரியகுளம் வரதராஜாப்பெருமாள் கோயிலில் உலக நன்மைக்கும் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க ஜூலை 23 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் திருப்பவித்ரோத்ஸவம் நடந்தது. தினமும் காலை 8:30 மணி மாலை 6:00 மணிக்கும் யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகசாலை பூஜைக்கு மஞ்சள், நெய், வாழைப்பழம்,தேன் வழங்கினர்.வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பக்தர்களுக்கு பவித்ர மாலை வழங்கப்பட்டது.