வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்கொண்டம் விழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2022 10:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா நடந்தது. இதில் பூசாரி ரகுபதி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஒன்று. இங்கு, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா துவங்கியது. 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டது. குண்டத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்தனர். பின்பு பொங்கல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து குண்டத்தில் ஊஞ்ச விறகு அடுக்கி வைக்கப்பட்டது. கோவில் பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். இன்று காலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், ஆறு மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் பூசாரி ரகுபதி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார். விழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்க அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, குண்டம் இறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.