பதிவு செய்த நாள்
26
ஜூலை
2022
10:07
கிள்ளை: சிதம்பரம் அருகே ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மண்டலாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மண்டலாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி, நடந்த கலச விளக்கு பூஜையை, மாவட்டத் தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.ஓம் சக்தி கொடியை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஏற்றி வைத்தார்.அன்னதானத்தை, ஊராட்சித் தலைவர் அம்சா வேணுகோபால் துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயபால்.மாவட்ட வேள்ளி குழுத் தலைவர் கோவிந்தராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் அர்ச்சுனன், நிர்வாகிகள் அருளானந்தம், கணபதி, பார்த்தசாரதி, கண்ணன், ஜவகர், சஞ்சீவராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.