ஸ்ரீவி. திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2022 12:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா ஜூலை 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பணிக்குழுக்களின் இயக்குனர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமை வகித்தார். மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவி பங்கு சந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத்திருப்பலியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலை 7 மணிக்கு ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முதன்மைகுரு அருட்பணி ஜெரோம் எரோனி மூஸ் தலைமையில், மறைவட்ட அதிபர் சந்தன சகாயம் அடிகள், உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகள் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி, ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகர் முக்கிய வீதியில் வழியாக சென்று மீண்டும் பங்கு ஆலயம் வந்தடைந்தது. ஏராளமான இறை மக்கள் பங்கேற்றனர். பின்பு நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெற்றது.