பதிவு செய்த நாள்
26
ஜூலை
2022
05:07
உசிலம்பட்டி: வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன் 10 ல் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு தினத்தில் பக்தர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலில் வழிபாடு நடத்தினர்.
கோஷ்டி மோதல்: கோயிலில் வழிபாடு நடத்துவதில் பங்காளிகள் ஒரு தரப்பினரிடம் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இவர்களில் ஒரு தரப்பினர் கோயிலுக்குள் முன்னதாக செல்ல முற்பட்ட போது தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்கள், கம்புகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் மணிகண்டன், மேனகா மற்றும் வாலாந்தூர் பாண்டி 50, மலர்விழி 45, சங்கிலி 55, பாண்டி 65, ஜெயபாண்டி 40, ஆரியபட்டியைச் சேர்ந்த கல்யாணி 19, வீரராகவன் 35, கீர்த்திராஜா 26, தமிழரசு 29, கல்யாணி 27, வயக்காட்டு சாமி 48, ராஜா 56 ஆகியோர் காயம் அடைந்தனர். பாதுகவலுக்கு இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தபின் மற்ற கிராமங்களில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தவர்கள் கோயிலில் சென்று வழிபாடு நடத்தினர்.