Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : தாணிப்பாறையில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா : தாணிப்பாறையில் குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
07:07

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா, பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. இதற்காக தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்

இக்கோயிலில் ஆடி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜுலை 25) முதல் ஜூலை 30 வரை 6 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்திருந்தனர். அதிகாலை 05:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டது. மதியம் மூன்று மணி வரை சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 04:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள், எளிதில் தீப்பற்றும் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை மோப்பநாய் சிமி மூலம் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் தெருவில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம், : எத்தனையோ அழிவு முயற்சிகள் நடந்தாலும் இன்றும் சனாதன வைதீக தர்மம் நிலைத்து நிற்பதற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar