கிருஷ்ணசுவாமி கோயிலில் ஆக., 1ல் மூலிகை மருந்து வழங்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2022 08:07
மூணாறு: இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே இடவெட்டியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் நோய் எதிர்ப்பு மூலிகை மருந்துகள் ஆகஸ்ட் ஒன்றில் வழங்கப்படுகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களுக்கும் பின்னால் ஐதீகங்களும், சரித்திரங்களும், அற்புதங்களும் ஏராளம் மறைந்து உள்ளன. அது போன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் நாட்டில் உள்ளதாக கூறப்படும் நிலையில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே இடவெட்டியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலும் ஒன்று என வரலாறு கூறுகிறது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மலையாளத்தில் கர்கடகம் மாதம் என அழைக்கப்படும் ஆடி மாதத்தில் 16ம் தேதி (ஆகஸ்ட் 1ம் தேதி) பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு கொண்ட ஆயுர்வேத மருந்து வழங்கப்படுகிறது. கோயிலில் மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தி வழங்கப்படும் மருந்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் நோய் தீர்க்கும் குணமும் அதிகம் உண்டு என்பது ஐதீகம். ஆகவே பக்தர்கள் ஆகஸ்ட் ஒன்றில் நடக்கும் மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு 9495960102 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.