சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2022 06:07
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் மணிமுக்தா ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் பெரியநாயகி அம்மனை ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதனால் தமிழக முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வருவது வழக்கம்.