பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
06:07
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2 கோடியே 92 லட்சம் கிடைத்துள்ளது.
பழநியில் மலைக்கோயிலில் ஜூலை. 26,27ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (ஜூலை 27ல்) காணிக்கையாக 177 கிராம் தங்கமும், 1,933 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 75 லட்சத்து 40 ஆயிரத்து 75 மற்றும் 361 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1,212 கிராம் தங்கமும், 18 ஆயிரத்து 886 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 92 லட்சத்து 260ஆயிரத்து 315, மற்றும் 1,455 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.