பதிவு செய்த நாள்
29
ஜூலை
2022
08:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், 1.54 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், ஒரு கோடியே, 54 லட்சத்து, 13 ஆயிரத்து, 648 ரூபாய், 372 கிராம் தங்கம், 708 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.