பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், கவுமாரியம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர், கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோயில், வடுகபட்டி பகவதி அம்மன் கோயில், மேல்மங்கலம் முத்தையா கோயில் உட்பட தாலுகா பகுதிகளில் அனைத்து கோயில்கள் மற்றும் குலையவும் கோயில்களில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னோர்களுக்கு தர்பணம்: பாலசுப்பிரமணியர் கோயில் வராத நதியில் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடத்தில் ஏராளமானோர் முன்னோர்களை வணங்கி வழிபாடு செய்தனர்.