பண்ணைக்காடு, கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல் காடு பூதநாச்சி அம்மன், கொடைக்கானல் பெரிய மாரியம்மன், டோபி கானல் காளியம்மன் மற்றும் இங்குள்ள சிவன் கோயில்களில் அபிஷேக ,ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.