Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி : அம்மன் கோயிலில் ... திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2022
08:07

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அதிக அளவில் திரண்ட பக்தர்களை சமாளிக்க போலீஸ் இல்லாததால் ஊஞ்சல் உற்சவத்தை முன்னதாக நடத்தி முடித்தனர். இதனால் வழக்கமான நேரத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். ஆடி அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லா இடங்களிலும் நெரிசல் இருந்தது. எனவே இரவு 12 மணிக்கு துவங்க வேண்டிய உஞ்சல் உற்சவத்தை 10 மணிக்கு துவக்கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். 10.45 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவத்தை நிறைவு செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஏமாற்றம்: ஆடி அமாவாசையின் போது வழக்கத்தை விட 2 மடங்கு பக்தர்கள் வருவார்கள். இதை கணக்கில் கொண்டு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் பஸ் வசதி செய்வார்கள். நேற்று முன்தினம் மாமல்லபுரம் பாதுகாப்பிற்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பாதுகாப்பிற்கும் விழுப்புரம் மாவட்ட போலீசார் சென்று விட்டனர். இதனால் குறைவான போலீசாரே மேல்மலையனூர் வந்திருந்தனர். இவர்களை கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் முன்னதாக ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். வழக்கமாக 11.30 முதல் 12 மணிக்குள் உற்சவம் துவங்கும் என்பதை கருத்தில் கொண்டு 11 மணிக்கு பிறகு பல ஆயிரம் பக்தர்கள் வந்தனர். ஊஞ்சல் உற்சவம் 10.45 மணிக்கே முடிந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar