Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி திருக்கல்யாணம் விழா : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
ஆடி திருக்கல்யாணம் விழா : ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2022
08:07

ராமேஸ்வரம்: ஆடி திருக்கல்யாண விழாவி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்மன் வீதி உலா நாளில் நடை சாத்தப்படுகிறது.

ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இன்று (ஜூலை 30) கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடானதும், மாலை 4 :30 முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை சாத்தப்படும்.ஆக., 2ல் ஆடித் தபசு விழா யொட்டி நள்ளிரவு 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3 மணி முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதன்பின் கால பூஜையும் நடக்கும். அன்று காலை 6 மணிக்கு மேல் கோயிலில் இருந்து அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு மண்டபத்திற்கு புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும். அன்று மாலை 3 மணிக்குள் தபசு மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் முடிந்ததும், கோயிலுக்கு மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மன் திரும்பியவுடன் நடை திறக்கப்படும். இதன்பின் வழக்கமான பூஜைகள் நடக்கும்.

ஆக., 6ல் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்க உள்ளதால் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடை சாத்தப்படும். ஆக.,8ல் நள்ளிரவு 2 மணிக்கு கோயில் நடை திறந்து, நள்ளிரவு 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனைதொடர்ந்து கால பூஜையும் நடக்கும். பின் காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 10 மணிக்கு திறக்கப்படும். பின் அர்த்தசாம பூஜை நடந்ததும், கோயில் நடை சாத்தப்படும் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில், அரசின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த,  உத்திராயண புண்ணியகால ... மேலும்
 
temple news
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
கோவை;  மார்கழி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar