மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து படைத்தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.