பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
ஓசூர்: ஓசூர் தர்கா மாருதி நகர் முத்துமாரியம்மன் கோவில், 24ம் ஆண்டு உற்சவ விழா விமர்ச்சையாக நடந்தது.இந்த விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீபராதனைகள் நடந்தது. மாலையில் தினசரி அம்மன் வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி ஓசூர் ராம்நகர் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்துமாரியம்மனுக்கு தாய் வீட்டு சீதனும், விசேஷ அபிஷே பூஜையும் நடந்தது.மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்து. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் தேதி ஆடித்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள், முத்துமாரியம்மனுக்கு சக்தி கிரகம், பால்குடம், அலகு குத்துதல், விமான அலகு குத்துல் மற்றும் அக்னி கிரகம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதன்பின் பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடந்தது. இரவு இன்னிச்சை கச்சேரி நடந்தது.நேற்று காலை 11 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு பரிசு குலுக்கல் நடந்தது. இன்று 12ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, அம்மனை ஆற்றுக்கு அழைத்து செல்லுதல், பொங்கல் வைத்து வழிப்பாடு ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கடேஷ், ரங்கன், ராஜூ, கதிர்வேல், சேகர், ராமநாதன், ராமசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.