பதிவு செய்த நாள்
13
ஆக
2012
10:08
ரிஷிவந்தியம் :பகண்டைகூட்ரோடு அருகே ஓடியந்தல் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சங்கராபுரம் வட்டம் ஓடியந்தல் கிராமத்தில் விநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி கடந்த 11ம் தேதி மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,மகாகணபதி ஹோமம்,கோபூஜையும், நவகிரகஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது, மாலை 5 மணிக்கு மகாபிஷேகம், தீபாராதனையும், இரவு சாமி வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சீனுவாசன், துணைத்தலைவர் ஜெய்சங்கர், தர்மகர்த்தா ராமச்சந்திரன், சுந்தர்ராஜ், சுந்தரமூர்த்தி, பாலகிருஷ்ணன், ரங்கநாதன், கண்ணன், சந்துராசு. ரகோத்தமன், ஏழுமலை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.