Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் ... சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக, சென்னை பாரிமுனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை, பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் பினிரோ; சிலை கடத்தலில் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது வீட்டில், பழமையான கோவில்  சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்துள்ளது.அந்த வீட்டில், இமானுவேல் பினிரோவின் மனைவி பமீலா, 65, என்பவர்  வசித்து வருகிறார்.ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, அம்மன், சனீஸ்வரர் உட்பட ஒன்பது கற்சிலைகளை போலீசார் கண்டுபிடித்தனர். சிலைகளுக்குரிய ஆவணங்கள் எதுவும்  பமீலாவிடம் இல்லை.இது குறித்து போலீசார் கூறியதாவது:இந்த சிலைகள், 300 ஆண்டுகள் பழமையானது. சிலைகளின் அடிப்பகுதியில், கோவிலில் நிறுவப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் உள்ளன;  இதனால் இவை திருட்டு சிலைகள் தான். எந்த கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டன என விசாரித்து வருகிறோம். பமீலா, இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தார்.  இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சிலைகளை மீட்ட போலீசாரை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பாராட்டியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar